அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணிக்கு த.வெ.க. வருமா? விஜய்யின் முடிவுக்காக காத்திருக்கும் தமிழக அரசியல்

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணியில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சேருமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணிக்கு த.வெ.க. வருமா? விஜய்யின் முடிவுக்காக காத்திருக்கும் தமிழக அரசியல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள 17-வது சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்துள்ளது. தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் மார்ச் 30ஆம் தேதி தொடங்குகிறது.

தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் சூழலில், அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணியில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) இணையுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் அதிகம் பேசப்படும் விவகாரமாக மாறியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தொடக்கத்தில் த.வெ.க. தரப்பில் விஜய் முதலமைச்சர் வேட்பாளராக இருப்பார் என்றும், கூட்டணிக்கு யாரும் வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது.

ஆனால் எதிர்பார்த்தபடி வேறு கட்சிகள் த.வெ.க. கூட்டணியில் இணையாத நிலையில், அடுத்த கட்ட அரசியல் திட்டம் குறித்து விஜய் ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகின. இதே நேரத்தில் பா.ஜ.க. தரப்பில் இருந்து விஜய்யுடன் கூட்டணி பேச்சுவார்த்தை முன்னேறியதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணியில் த.வெ.க. இணைந்தால் 60 தொகுதிகள் மற்றும் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என முன்மொழிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஆனால் த.வெ.க. தரப்பில், தேர்தலில் வெற்றி பெற்றால் முதல் 2½ ஆண்டுகள் விஜய் முதலமைச்சராக பதவி வகிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கோரிக்கையை பா.ஜ.க. ஒரு அளவிற்கு பரிசீலித்தாலும், அ.தி.மு.க. தரப்பில் இருந்து அதற்கு தெளிவான மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் நடத்தி, கூட்டணியாக போட்டியிடலாமா அல்லது தனித்து போட்டியிடலாமா என்ற கேள்வியில் நிர்வாகிகளின் கருத்தை கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் கூட்டணியாகவே தேர்தலை சந்திக்கலாம் என்ற கருத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் சி.பி.ஐ. விசாரணை தொடர்பாக விஜய் டெல்லி சென்றிருந்தபோது, அவரது நெருங்கிய நிர்வாகிகள் ஆதவ் அர்ஜூனா மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோரை பா.ஜ.க. மேலிடத் தலைவர்கள் தனியாக சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இருப்பினும் இறுதி முடிவை விஜய் இதுவரை வெளிப்படுத்தாததால், த.வெ.க. எந்த பாதையை தேர்வு செய்யும் என்ற கேள்வி தமிழக அரசியலில் தொடர்ந்தும் பேசப்பட்டு வருகிறது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT