மோசமான வானிலை: அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன

நாடு முழுவதும் நிலவும் கடுமையான வானிலை காரணமாக, இன்று (நவம்பர் 28) காலை 6 மணி முதல் அனைத்து வழித்தடங்களிலும் உள்ள அனைத்து ரயில் சேவைகளையும் ரயில்வே திணைக்களம் நிறுத்தியுள்ளது.

நவம்பர் 28, 2025 - 08:38
மோசமான வானிலை: அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன

நாடு முழுவதும் நிலவும் கடுமையான வானிலை காரணமாக, இன்று (நவம்பர் 28) காலை 6 மணி முதல் அனைத்து வழித்தடங்களிலும் உள்ள அனைத்து ரயில் சேவைகளையும் ரயில்வே திணைக்களம் நிறுத்தியுள்ளது.

தொடர்ந்து பெய்யும் கனமழையால் பல ரயில் பாதைகளில் நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் மரங்கள் விழும் அபாயம் அதிகரித்து வருவதால், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக பொது மேலாளர் (செயல்பாடுகள்) சந்திரசேன பண்டாரா தெரிவித்தார். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!