இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக 12 மாவட்டங்களில் இதுவரை மொத்தம் 123 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் நிலவும் கடுமையான வானிலை காரணமாக, இன்று (நவம்பர் 28) காலை 6 மணி முதல் அனைத்து வழித்தடங்களிலும் உள்ள அனைத்து ரயில் சேவைகளையும் ரயில்வே திணைக்களம் நிறுத்தியுள்ளது.