எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா? பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை அரசாங்கம்அறிவிப்பு
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்று பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஒரு மாதத்திற்குத் தேவையான கையிருப்பு உள்ளதாகவும், புதிய இறக்குமதிகள் இல்லாவிட்டாலும் விநியோகத்தில் பாதிப்பு இருக்காது என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
எனவே, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் நின்று மக்கள் தேவையற்ற பீதி அடைய வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.