உலகச் சந்தையில் டொலர் வீழ்ச்சி: இலங்கையில் 4 இலட்சத்தைக் கடந்தது ஒரு பவுன் தங்கத்தின் விலை!
அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மை மற்றும் உலக சந்தையில் நிலவும் புவிசார் அரசியல் சூழல்கள் காரணமாக, அமெரிக்க டொலரின் மதிப்பு சரிவைச் சந்தித்துள்ளது.
அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மை மற்றும் உலக சந்தையில் நிலவும் புவிசார் அரசியல் சூழல்கள் காரணமாக, அமெரிக்க டொலரின் மதிப்பு சரிவைச் சந்தித்துள்ளது. இதன் எதிரொலியாக, பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளதால், அதன் விலை சர்வதேச அளவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடியாக உயர்ந்து வருகிறது.
இன்று (24.02.2026) உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 5,150 அமெரிக்க டொலரை கடந்து, கடந்த மூன்று வாரங்களில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் மாற்றத்தால் இலங்கையிலும் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
அதன்படி, இலங்கையில் இன்றைய தங்க விலை நிலவரம்:
24 காரட் (8 கிராம் / ஒரு பவுன்): ரூ. 452,550
22 காரட் (8 கிராம் / ஒரு பவுன்): ரூ. 414,850
22 காரட் (1 கிராம்): ரூ. 51,860
கடந்த சில நாட்களாகவே ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை, தற்போது ஒரு பவுன் 4 லட்சத்தைத் தாண்டி விற்பனை செய்யப்படுவது நுகர்வோர் மற்றும் நகை வியாபாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.