ஈரானின் புதிய சுப்ரீம் லீடராக மௌஜ்தபா கமேனி தேர்வு: பதற்றத்துக்கு மத்தியில் அதிகார மாற்றம்

அலி கமேனியின் மகன் Mojtaba Khamenei ஈரானின் புதிய சுப்ரீம் லீடராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 56 வயதான மௌஜ்தபா, அலி கமேனியின் இரண்டாவது மகன் ஆவார்.
ஈரானின் புதிய சுப்ரீம் லீடராக மௌஜ்தபா கமேனி தேர்வு: பதற்றத்துக்கு மத்தியில் அதிகார மாற்றம்

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றத்திற்கிடையே Tehran நகரை மையமாகக் கொண்டு அரசியல் பரபரப்பு நிலவுகிறது. Iran மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் அந்நாட்டின் உச்ச தலைவர் Ali Khamenei உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் ஈரானில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பான பிரச்சினைகளைத் தொடர்ந்து Israel மற்றும் United States இணைந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை தொடங்கிய இந்த மோதல் பல நாட்களாக நீடித்து வருகிறது. தொடக்கத்திலேயே நடந்த ஏவுகணை தாக்குதலில் அலி கமேனி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் இந்த தகவலை ஈரான் மறுத்தாலும், பின்னர் அதை உறுதிப்படுத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அலி கமேனியின் மறைவு ஈரானில் அரசியல் குழப்பத்தை உருவாக்கியது. அந்த நாட்டின் சட்டப்படி, வல்லுநர் சபை (Assembly of Experts) புதிய உச்ச தலைவரைத் தேர்வு செய்யும் பொறுப்பை வகிக்கிறது. இடைக்கால ஏற்பாடாக அலிர்சா அராஃபி பொறுப்பு வகித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், அலி கமேனியின் மகன் Mojtaba Khamenei ஈரானின் புதிய சுப்ரீம் லீடராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 56 வயதான மௌஜ்தபா, அலி கமேனியின் இரண்டாவது மகன் ஆவார். நீண்டகாலமாகவே அவரை வாரிசாக கருதப்பட்ட நிலையில், இந்த நியமனம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

போர் மற்றும் அரசியல் பதற்ற சூழலில் நடந்த இந்த அதிகார மாற்றம், மத்திய கிழக்கின் அடுத்தகட்ட நிலைமைகளை தீர்மானிக்கும் வகையில் அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர