ஈரானின் ராணுவக் கட்டமைப்புகளைத் தகர்க்க தரைப்படைத் தாக்குதல் அவசியமில்லை என்றும், வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் மூலமே வெற்றி பெறுவோம் என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
ஈரானின் புதிய உயரிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனி, அமெரிக்காவிற்கு எதிராகத் தனது முதல் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இந்த கோடைக்காலத்தில் நடைபெறவுள்ள கால்பந்து உலகக்கோப்பை போட்டிகளில் ஈரான் அணி கலந்து கொள்ள வரவேற்பு அளிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார் என்று பிஃபா தலைவர் ஜியான்னி இன்ஃபாண்டினோ கூறியுள்ளார்.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கை இன்று 11-வது நாளாக தொடர்கிறது. இந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்கள் நடத்தி வருகிறது.
இது வெறும் வாரிசு அரசியல் மாற்றம் மட்டுமல்ல; போர் மேகங்கள் சூழ்ந்துள்ள ஒரு தேசம், தனது பிடிவாதமான மற்றும் சமரசமற்ற நிலைப்பாட்டை உலகிற்கு உரக்கச் சொல்லும் ஒரு அரசியல் செய்தியாகவும் பார்க்கப்படுகிறது.
போரை முடிக்கும் மனநிலையில் தாம் இல்லை என்றும் டிரம்ப் தெரிவித்தார். இந்த மோதலில் அமெரிக்கா ஏற்கனவே பெரிய முன்னிலை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மூடிவிடும் என்ற அச்சம் உலக நாடுகளுக்கு ஏற்பட்டிருந்த நிலையில், அதுகுறித்து ஈரான் முக்கிய விளக்கமொன்றை வெளியிட்டுள்ளது.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தேவையான பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
காமேனியின் விருப்பப்படியும் அவரது குடும்பத்தினர் முடிவின்படியும், மஷாத்தில் உள்ள அவரது தந்தையின் நினைவிடத்திற்கு அருகிலேயே காமேனியின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.
ஒரு ஆட்சியைக் கவிழ்த்த பிறகு, அங்கு நிலையான ஒரு மாற்றைக் கொண்டு வராமல் இருப்பது மீண்டும் பழைய நிலைக்கே அந்த நாட்டை இட்டுச்செல்லும் என்ற அச்சம் ஐரோப்பிய நாடுகளிடையே நிலவுகிறது.
அலி கமேனியின் மகன் Mojtaba Khamenei ஈரானின் புதிய சுப்ரீம் லீடராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 56 வயதான மௌஜ்தபா, அலி கமேனியின் இரண்டாவது மகன் ஆவார்.
“எங்கள் கூட்டு நடவடிக்கை, துணிச்சலான ஈரானிய மக்கள் தங்கள் எதிர்காலத்தை தங்களது கைகளில் எடுத்துக்கொள்வதற்கான சூழ்நிலையை உருவாக்கும்” என அவர் கூறினார்.
மத்திய கிழக்கு மற்றும் உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்டும் நோக்கில், தேவைப்படும் வரை கடுமையான மற்றும் துல்லியமான குண்டுவெடிப்பு நடவடிக்கைகள் தொடரும்” என டிரம்ப் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் கடுமையான தாக்குதலைத் தொடங்கியுள்ளது.