இன்றைய வானிலை முன்னறிவிப்பு: பல மாகாணங்களில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை

மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படும்.

டிசம்பர் 6, 2025 - 09:48
இன்றைய வானிலை முன்னறிவிப்பு: பல மாகாணங்களில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை

வடகிழக்கு பருவமழை படிப்படியாக நாட்டில் வலுப்பெற்று வருவதால், பல பகுதிகளில் இன்று மழை தொடரும். வடக்கு, வட-மத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்கள் மற்றும் மாத்தளை மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு அதிகம்.

மேலும், மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படும்.

மேற்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமேற்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் மூடுபனி காணப்படும்.

இடியுடன் கூடிய மழை ஏற்படும் நேரங்களில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!