தற்போது நிலவும் எல்நினோ காலநிலையால் பேட்டரி சேமிப்பு அமைப்புகளில் சுமார் 450 மெகாவாட் மின் சேமிப்புக் குறைப்பு ஏற்படக்கூடும் என்றும், இதனால் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்வது மிகவும் கடினமானதாக மாறும் என்றும் சந்திரலால் சுட்டிக்காட்டியுள்ளார்.
எல் நினோவினால் ஏற்படும் தீவிர வானிலை மாற்றங்களால் ஆபத்தில் உள்ள நாடுகளில் வசிக்கும் பல கோடி மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை சந்திக்க நேரிடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதை நிறுத்த முயலும்போது ஏற்படும் விலகல் அறிகுறிகளை கட்டுப்படுத்துவதற்காகவே தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள் என்றும் அவர் விளக்கினார்.
கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும், வெப்பநிலையானது கடும் எச்சரிக்கை மட்டத்தில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சூரிய ஒளியில் நீண்ட நேரம் தங்கியிருப்பது உடல் வெப்பத்தை அதிகரித்து, மனநல ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்று அவர் விளக்கியுள்ளார்.
சில சந்தர்ப்பங்களில் நெருங்கிய உறவினர்கள் கூட கடத்தல்காரர்களால் பயன்படுத்தப்படலாம் என்பதால், தங்களுக்குச் சொந்தமில்லாத எந்தப் பொருளையும் கொண்டு செல்லச் சம்மதிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் சோதனைகளில் இருந்து தப்புவதற்காக, சிறிய அளவிலான பொதிகளைப் பயன்படுத்தி போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வர கடத்தல்காரர்கள் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான எந்தவொரு பணக் கோரிக்கையையும் நலன்புரி நன்மைகள் சபை விடுத்ததில்லை என்றும், இது பொதுமக்களை ஏமாற்றும் மோசடி நடவடிக்கையாகும் என்றும் சபை தெளிவுபடுத்தியுள்ளது.
விமானம் தரையிறங்கிய பின்னர் மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப ஆய்வின் போது, அதன் இடது சக்கரம், இடது என்ஜின் பகுதி மற்றும் பிற முக்கிய பாகங்களில் பெருமளவிலான பட்ட நூல்கள் சிக்கியிருந்தமை கண்டறியப்பட்டது.
வாகன நிறுத்துமிடக் கட்டணங்கள் நிறுத்திவைக்கப்பட்டுவிட்டதாகக் கூறி, பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடகத் தளங்களில் பரவிவரும் வீடியோக்கள் "போலிச் செய்திகள்" என்று, கொழும்பு மாநகர சபை கூறியுள்ளது.
வேத ஜோதிடத்தின்படி, புத்தி, பேச்சு, வியாபாரத்திற்கு காரணமான புதன் கிரகம் ஏப்ரல் 30 ஆம் தேதி மேஷ ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறது. இந்தப் பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களையும் பாதித்தாலும், ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்று ராசியினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
மார்ச் 26 முதல் சனி பகவானின் கும்ப ராசியில் செவ்வாய் உதயமாவதால், மிதுனம், மகரம் மற்றும் மீன ராசிக்காரர்கள் தொழில் மற்றும் நிதி விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ஜோதிட நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த வெப்பமான காலநிலையில் பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நாட்டில் தற்போது எரிபொருள் விநியோகம் வழமையான முறையில் நடைபெற்று வருவதாகவும், எந்தவிதத் தடையும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
சப்ரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படலாம்.
மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படும்.