ஆடுகள், பன்றிகள் மற்றும் செம்மறி ஆடுகளை உள்ளடக்கும் வகையில் விலங்குகள் சட்டத்தில் திருத்தம்
விலங்கு என்பதன் வரையறையில் ஆடுகள், பன்றிகள் மற்றும் செம்மறி ஆடுகளைச் சேர்க்கும் வகையில், 1958 ஆம் ஆண்டின் விலங்குகள் சட்டம் எண் 29-ஐத் திருத்துவதற்கான மசோதாவை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு, வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கே.டி. லால் காந்தவின் பணிப்புரையின்படி வெளியிடப்பட்டுள்ளது. இது 05 ஜூன் 2026 திகதியிட்ட வர்த்தமானி பகுதி 2-க்கான ஒரு இணைப்பாகும்.
அதன்படி, இந்தத் திருத்தத்தின் மூலம் விலங்குகள் சட்டத்தின் பகுதி 2-இன் விதிகள் ஆடுகள், பன்றிகள் மற்றும் செம்மறி ஆடுகளுக்குப் பொருந்தும்.
இந்தத் திருத்தம் தொடர்பான அமைச்சரவை முடிவு முன்னரே எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.