'ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் அரசியலுக்குக் கொண்டு வர வேண்டுமா, இல்லையா என்பதை காலம் தீர்மானிக்கும்'

அவர், “ரணில் விக்கிரமசிங்கவை மக்கள் வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். அவரை மீண்டும் அரசியலுக்குக் கொண்டு வர வேண்டுமா இல்லையா என்பதை காலம்தான் தீர்மானிக்கும்” என கூறினார்.
'ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் அரசியலுக்குக் கொண்டு வர வேண்டுமா, இல்லையா என்பதை காலம் தீர்மானிக்கும்'
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நாடு தற்போது மிகவும் மோசமான நிலையிலுள்ளதாகவும், தற்போதைய அரசாங்கம் வீழ்ச்சியடைந்த பின்னர் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான திட்டங்களை ஐக்கிய தேசியக் கட்சி வகுத்து வருவதாகவும் அக்கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், நாட்டின் அரச இயந்திரம் செயலிழந்துள்ளதுடன், தனியார் துறையும் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார். இதனால் நாடு முழுமையாக வீழ்ச்சியடைந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்த உண்மை நிலையை மக்கள் புரிந்துகொள்வதற்கு இடமளிக்க வேண்டும் என தெரிவித்த வஜிர அபேவர்தன, தற்போதைய சூழ்நிலையிலிருந்து நாட்டை எவ்வாறு மீட்டெடுக்கலாம் என்பது குறித்து தனது கட்சி தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான திட்டங்களை வகுப்பதுடன், அரசியல் மற்றும் பொருளாதார மீட்சிக்குத் தேவையான முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், “ரணில் விக்கிரமசிங்கவை மக்கள் வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். அவரை மீண்டும் அரசியலுக்குக் கொண்டு வர வேண்டுமா இல்லையா என்பதை காலம்தான் தீர்மானிக்கும்” என கூறினார்.

வஜிர அபேவர்தனின் இந்தக் கருத்துகள் தற்போதைய அரசியல் சூழலில் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், எதிர்கால அரசியல் கூட்டணிகள் மற்றும் தலைமைத்துவம் தொடர்பான விவாதங்களையும் தூண்டியுள்ளன.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -