தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றில் மனு!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றில் மனு!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணையுடன் தொடர்புடைய பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தனது கைதைத் தடுக்கும் உத்தரவு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாகத் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் CID அதிகாரி மாதவ குணவர்தன ஆகியோர் எதிர்மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கடந்த 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு அன்று இலங்கையில் நடந்த தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி மீது நடவடிக்கை எடுக்கப்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது. 

ஏற்கெனவே கொழும்பு கோட்டை நீதவான், கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத் தடையைப் பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பின்னணியில், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்யும் எந்தவொரு நடவடிக்கையையும் தடை செய்யுமாறு கோரி கோட்டாபய ராஜபக்சஷ மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -