கொள்ளை சம்பவத்தில் சிக்கிய 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் விளக்கமறியலில்!

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு – புதுக்கடை நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

செப்டெம்பர் 18, 2024 - 22:25
கொள்ளை சம்பவத்தில் சிக்கிய 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் விளக்கமறியலில்!

கொழும்பு, முகத்துவாரம் பகுதியில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் கைதான 4 பொலிஸ் உத்தியோகத்தர்களும் நாளை (19) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு – புதுக்கடை நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முகத்துவாரம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து 14 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பிலேயே குறித்த 4 பொலிஸ் உத்தியோகத்தர்களும் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களில் மேல் மாகாண வடக்கு புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவரும், விசேட பணியகத்தின் இரண்டு உத்தியோகத்தர்களும், புளுமெண்டல் பொலிஸ் நிலையத்தின் உத்தியோகத்தர் ஒருவரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!