இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் 14 பேர் கைது
நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த இந்திய மீனவர்கள் 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த இந்திய மீனவர்கள் 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் வந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்ற இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.