இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் 14 பேர் கைது
நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த இந்திய மீனவர்கள் 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் வந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்ற இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
