கெலேகால ஸ்ரீ கதிரேசன் ஆலயத்தில் திருட்டு
ஆலயத்தின் பிரதான நுழைவாயில் உடைக்கப்பட்டுஆலயத்தில் இருந்த பெறுமதியான தங்க நகைகள் மற்றும் உண்டியல் பணம் ஆகியவை திருடப்பட்டுள்ளது.

நுவரெலியா- நானுஓயா வீதிக்கு அருகிலுள்ள கெலேகால ஸ்ரீ கதிரேசன் ஆலயத்தின் பிரதான நுழைவாயில் உடைக்கப்பட்டுஆலயத்தில் இருந்த பெறுமதியான தங்க நகைகள் மற்றும் உண்டியல் பணம் ஆகியவை திருடப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை ( 16 ) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.