இருமல் அல்லது சுவாசிப்பதில் சிரமம்... குழந்தைகள் தொடர்பில் பெற்றோருக்கு அறிவித்தல்

ஆஸ்துமா நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 

மார்ச் 1, 2025 - 18:11
இருமல் அல்லது சுவாசிப்பதில் சிரமம்... குழந்தைகள் தொடர்பில் பெற்றோருக்கு அறிவித்தல்

இந்த நாட்களில் காற்றில் அதிக அளவு தூசி இருப்பதால், ஆஸ்துமா நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 

இவர்களில் அதிக எண்ணிக்கையான குழந்தைகள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாக பொரளை ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும், குழந்தைகளுக்கு தொடர்ந்து இருமல் அல்லது சுவாசிப்பதில் சிரமம் இருந்தால், பெற்றோர்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

தற்போது நடைபெறும் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பள்ளி கிரிக்கெட் போட்டிகள் சிறுவர்களை அதிக அளவிலான தூசிக்கு ஆளாக்கி, அவர்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!