இலங்கை

விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

இவ்வாறு உயிரிழந்தவர் 41 வயதான, 3,000 மணித்தியாலங்களுக்கும் மேல் விமானப் பயண அனுபவத்தைக் கொண்ட அனுபவம் வாய்ந்த விமானி என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. 

பேரழிவுக்கு மத்தியில் வீதி விபத்துகள் - மூன்று பேர் உயிரிழப்பு

திக்வெல்ல-ரத்மலே வீதியில் உள்ள கிரினெலிய பகுதியில் டிரக்டர் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து, சாரதியை வாகனத்தின் கீழ் நசுங்கியுள்ளார்.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் குடிநீரை எச்சரிக்கையுடன் பயன்படுத்தவும்

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மக்கள் குடிநீரைப் பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் உயிரிழப்பு எண்ணிக்கை 334 ஆக உயர்வு - 370 பேர் காணாமல் போயுள்ளனர்

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

உடனடியாக வெளியேறுங்கள் - 7 மாவட்டங்களுக்கு மீண்டும் சிவப்பு அறிவிப்பு

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளதுடன், அந்த பகுதிகளை விட்டு பொதுமக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்துள்ளது.

சிவனொளிபாதமலையில் மண்சரிவு ஏற்படவில்லை வெளியான அறிவிப்பு

சிவனொளிபாதமலையில் மண்சரிவு ஏற்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்று  விகாராதிபதி பெங்கமுவே ஸ்ரீ தம்மதின்ன தேரர் தெரிவித்தார்.

மூன்று நாட்களுக்குள் நீர் விநியோகம் வழமைக்கு - நீர் வழங்கல் சபை அறிவிப்பு 

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் நீர் விநியோகத்தை முழுமையாக வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை.

நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது

பேரிடர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் ஒன்று லுனுவில மற்றும் வென்னப்புவ இடையேயான பகுதியில் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாரதி அனுமதிப்பத்திர சேவைகளை வழங்குவது தொடர்பான விசேட அறிவிப்பு

கணினி அமைப்பின் செயலிழப்பை மீட்டெடுக்க தொழில்நுட்பத் துறைகள் செயல்பட்டு வருவதாகத் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் பேரிடர் இறப்புகள் 200ஐ தாண்டியது - 218 பேரை காணவில்லை

இலங்கையில் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட பேரிடர் இறப்புகளின் எண்ணிக்கை 212 ஆக அதிகரித்துள்ளது.

19 முக்கிய ரயில் சேவைகள் இன்று மீண்டும் இயக்கம் – அனர்த்தப் பாதிப்பிலிருந்து ரயில் சேவை படிப்படியாக சாதாரண நிலைக்கு

இலங்கையில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட ரயில் சேவைகளில் 19 முக்கிய தொடருந்துகள் இன்று மீண்டும் இயக்கப்பட உள்ளன. கரையோரம், புத்தளம், களனிவெளி மார்க்கங்களில் சேவை சாதாரண நிலைக்கு திரும்புகிறது.

இலங்கையில் வெள்ளம் மற்றும் மண்சரிவு: 159 பேர் உயிரிழப்பு, 203 பேர் காணாமல் – 8.3 இலட்சம் பேர் பாதிப்பு!

இலங்கையில் நவம்பர் 16 முதல் தொடரும் வெள்ளம் மற்றும் மண்சரிவு பேரிடரில் 159 பேர் உயிரிழந்துள்ளனர்; 203 பேர் காணாமல் போயுள்ளனர். 8.3 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 1.2 இலட்சம் பேர் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் அவசரகால நிலை பிரகடனம் – அதிவிசேட வர்த்தமானி வெளியானது

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பரவலான பேரழிவை எதிர்கொள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவசரகால நிலையை அறிவித்துள்ளார். தேசிய அளவில் இறப்பு எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளதுடன்,  மேலும் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

வெள்ளத்தில் சிக்கிய  33 பேரை ஹெலிகொப்டர்  மூலம் மீட்ட  விமானப்படையினர்  

ராஜங்கனை  கிரிபாவ பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய  33 பேரை ஹெலிகொப்டர்  மூலம் விமானப்படையினர் மீட்டனர்.   

மோசமான வானிலை: இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளனர், 130 பேர் காணாமல் போயுள்ளனர்

இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக 12 மாவட்டங்களில் இதுவரை மொத்தம் 123 பேர் உயிரிழந்துள்ளனர்.

கலா ஓயாவில் பேருந்தில்  சிக்கிய 67 பயணிகளும் பாதுகாப்பாக மீட்பு

முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையை அடுத்து, அவர்கள் மீட்கப்பட்டுள்னர்.