முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே காலமானார்

பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு களுத்துறை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே காலமானார்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

முன்னாள் மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தமது 74 ஆவது வயதில் காலமானார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நேற்று (12) இரவு வாதுவையில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஏற்பட்ட திடீர் சுகயீனமடைந்ததையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு, வேட்பாளர்களை தெரிவு செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டபோதே அவருக்கு திடீரென சுகயீனம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஆளுநரான ரெஜினோல்ட் குரோ, மேல் மாகாண முதலமைச்சராகவும் (2000 -2005) பதவி வகித்ததுடன், அமைச்சு பதவிகளையும் வகித்துள்ளார்.

அத்துடன், 2016 பெப்ரவரி 14 இல் இவர் வட மாகாணத்தில்  ஆளுனராகவும் நியமிக்கப்பட்டார்.

அதன்பின்னர், சில காலம் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -