யாழில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த வயது 17 சிறுமி
யாழ். கோண்டாவில் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி கடந்த 20 ஆம் திகதி அதிக மாத்திரைகளை உட்கொண்டுள்ள நிலையில், அவரது பெற்றோர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிறுமியை அனுமதித்துள்ளனர்.
அதனையடுத்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
