இந்த நிலையில் எதிர்வரும் 30ஆம் திகதி வங்கிகளுக்கு விசேட விடுமுறை அளிப்பதாக அரசாங்கம் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
மே மாதம் நாட்டின் பணவீக்கமானது 21.1 வீதமாக பதிவாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நாட்டின் பணவீக்கமானது 33.6 வீதாக காணப்பட்டது.
உள்நாட்டு உற்பத்தி பொருட்களின் விலைகள் அடுத்த சில வாரங்களில் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூலை மாதம் மேற்கொள்ளப்படும் மின் கட்டண திருத்தத்தை விட, ஜனவரியில் மேற்கொள்ளப்படும் கட்டண திருத்தத்தில்அதிக சலுகைகள் வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
பணவீக்கம் குறைவதற்கு இணையாக அடுத்த இரண்டு மாதங்களில் சந்தை இயல்பு நிலைக்கு திரும்பும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க கூறியுள்ளார்.
கோழி இறைச்சி உள்ளிட்ட பல உணவு பொருட்களிள் விலை உயர்வால் நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த நான்கு ஆண்டுகளில் 40 இலட்சம் மக்கள் புதிதாக வறியவர்களாக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டவிரோதமாக சுற்றுலா வீசாவில் வெளிநாடுகளுக்குச் சென்ற அனைத்து பெண்களையும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 644,186 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.