ஜோதிட சாஸ்திரத்தில் குருபகவான் மிக முக்கியமான கிரகமாகக் கருதப்படுகிறார். ஒருவரின் ஜாதகத்தில் குருவின் நிலை வலுவாக இருந்தால், அவர்களின் வளர்ச்சியும் முன்னேற்றமும் தடையின்றி தொடரும் என்பதே நம்பிக்கை.
நவகிரகங்களில் இளவரசனாகப் போற்றப்படும் புதன், கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படும் சூரியன், இந்த இரு கிரகங்களும் ஒன்றிணையும்போது “புதாதித்ய ராஜயோகம்” உருவாகிறது.
இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் உணரப்படும் என்றாலும், தனுசு, துலாம் மற்றும் மகரம் ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கு இது குறிப்பாக நிதி நன்மைகளையும், வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றத்தையும் கொண்டுவரும் என ஜோதிட முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன.