உள்நாட்டு இறைவரித் திணைக்களம், 2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகள் தாக்கல் செய்யும் காலக்கெடுவை 2025 டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது.
1944 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் இது தொடர்பான முன்மொழிவு முன்வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
வங்கி அல்லது நிதி நிறுவனத்தினால் 05 சதவீதத்தினால் கழிக்கப்பட்ட முற்பண வருமான வரியின் மீளளிப்பை வழங்கும் முறையை மத்திய வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.