பாடசாலைகளுக்கு மூன்று நாட்கள் திடீர் விடுமுறை அறிவிப்பு

கண்டி நகரத்தில் உள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளையும் அடுத்த வாரம் மூன்று நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளுக்கு மூன்று நாட்கள் திடீர் விடுமுறை அறிவிப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கண்டி நகரத்தில் உள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளையும் அடுத்த வாரம் மூன்று நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

எதிர்வரும் 28, 29 மற்றும் 31 ஆம் திகதிகளில் அப்பகுதியில் உள்ள பாடசாலைகள் நடைபெறாது என மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே தெரிவித்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பாடசாலைகள் மூடப்படும் மூன்று நாட்களுக்குப் பதிலாக மூன்று சனிக்கிழமை பாடசாலைகள் நடைபெறும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

எசல பெரஹெராவுக்கு போக்குவரத்து நெரிசல் காரணமாக இவ்வாறு பாடசாலைகள் மூடப்படுகின்றன.

இவ்வாறு, அடுத்த வாரம் விடுமுறை வழங்கப்படவுள்ள பாடசாலைகள் விவரம் வருமாறு,

  • கண்டி நகரத்திலிருந்து கடுகஸ்தோட்டை பாலம் வரையிலான பாடசாலைகள்
  • கண்டி நகரத்திலிருந்து பேராதனை பாலம் மற்றும் கன்னோறுவ சந்தி வரையான பாடசாலைகள்
  • கண்டி நகரத்திலிருந்து குளச்சுற்றுவட்டத்திலிருந்து  அம்பிட்டிய வரையான பாடசாலைகள்
  • கண்டி நகரத்திலிருந்து தென்னேகும்புர பாலம் வரையான பாடசா​லைகள்
  • தொடம்வல ரோயல் ஆரம்பப் பாடசாலை/போவல வத்தை /ஹந்தான வரையான பாடசா​லைகள்

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -