இலங்கை

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 32 புறாக்கள் திருட்டு - பொலிஸ் விசாரணை!

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் 32 புறாக்கள் திருடப்பட்ட சம்பவம். நீதிமன்ற உத்தரவின் கீழ் வைக்கப்பட்டிருந்த புறாக்கள் காணாமல் போனதால், பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

பேனா துப்பாக்கியுடன் 23 வயது இளைஞன் கைது - நாகொடவில் வெளிநாட்டுத் தயாரிப்பு!

நாகொடவில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பேனா துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் 23 வயது இளைஞன் கைது. ஒற்றை தோட்டாவை சுடக்கூடிய தானியங்கி துப்பாக்கி பறிமுதல்.

பிரேக்கை அழுத்துவதற்கு பதிலாக பெண் செய்த காரியம்... வீதியில் சென்ற 3 பெண்கள் உயிரிழப்பு

கம்பளை, தொலுவ பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் வீதியில் பயணித்த 3 பெண்கள் உயிரிழந்திருந்தனர். காரை செலுத்திச் சென்ற பெண்ணின் கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

கொழும்பு நீச்சல் தடாகத்தில் மூழ்கிய சிறுவன்; பெற்றோர் மீது பழி போடும் நிர்வாகம்?

தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் குணமடைந்தவுடன், அவரது பெற்றோர் கொழும்பு நீச்சல் கழகத்திற்கு எதிராக வழக்குத் தொடர்வார்கள் எனவும் எச்சரித்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நடிகை சிம்ரன் இலங்கையை வந்தடைந்தார்

நடிகை சிம்ரன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, இலங்கையை இன்று பிற்பகல் வந்தடைந்தார்.

நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான மின்னல் எச்சரிக்கை

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் நீர்நிலைகள் போன்ற திறந்தவெளிப் பகுதிகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எல்பிட்டியவில் துப்பாக்கிச்சூடு சம்பவம்; பழிவாங்கும் நடவடிக்கை என சந்தேகம்

எல்பிட்டிய, ஓமத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது நேற்று (04) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மருதானையில் கைவிடப்பட்ட தோட்டாக்கள் மீட்பு

சம்பவ இடத்திலிருந்து 9, T-56 தோட்டாக்கள் மற்றும் 1 ரிவால்வர் தோட்டா என்பன மீட்கப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் அதிரடி சோதனை; பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 375 பேர் கைது

இந்த சோதனைகளின் போது, போதைப்பொருள் வைத்திருந்ததற்காக 917 பேர் கைது செய்யப்பட்டனர், குற்றங்களில் நேரடியாக ஈடுபட்ட 25 பேர் மற்றும் பிடியாணை பெற்ற 375 பேர் கைது செய்யப்பட்டனர்.

ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்தவர் கைது 

ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞரிடம் 945,000 ரூபாய் மோசடி செய்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

50 மீட்டர் தூரத்தினை 49 நொடிகளில் நீந்திக் கடந்து சோழன் உலக சாதனை படைத்த 6 வயது சிறுவன்

சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சியின் போது அங்கு அமைந்துள்ள நீச்சல் குளத்தில் 50 மீட்டர் தூரத்தினை ஃப்ரீ ஸ்டைல் என்ற முறையில் 49 நொடிகளில் நீந்திக் கடந்தார். 

கறிக்குழம்பு சட்டிக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு

தமிழகத்தின், திண்டுக்கல் மாவட்டத்தில் கறிக்குழம்பு சட்டியில் தவறிவிழுந்த   2 வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளது. 

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்

பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து தேசபந்து தென்னகோனை நீக்குவதற்கான யோசனை பாராளுமன்றில் 177 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கந்தானை நகரில் கண்ணை மூடவைத்த நபர்

அந்த நபர் தனது சைக்கிளின் கைப்பிடியின் இருபுறமும் தனது ஆடைகளைப் பிடித்துக்கொண்டு தனது மிதிவண்டியில் பயணிக்கின்றார்.

கழிப்பறை குழியில் விழுந்து எட்டு வயது சிறுவன் பலி

புதிதாக கட்டப்பட்ட வீட்டுக்கு கழிப்பறை ஒன்றை கட்டுவதற்காக அவரது தந்தையால் குழி ஒன்று தோண்டப்பட்டுள்ளது.