தென் கொரியாவில்  2 இலங்கையர் உட்பட மூன்று தொழிலாளர்களின் சடலம் மீட்பு

தென் கொரியாவின் தெற்கு கியோங்சாங் மாகாணத்தில் உள்ள கோசியோங்கில் உள்ள மீன் பண்ணையில் மூன்று தொழிலாளர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

நவம்பர் 10, 2025 - 14:24
தென் கொரியாவில்  2 இலங்கையர் உட்பட மூன்று தொழிலாளர்களின் சடலம் மீட்பு

தென் கொரியாவின் தெற்கு கியோங்சாங் மாகாணத்தில் உள்ள கோசியோங்கில் உள்ள மீன் பண்ணையில் மூன்று தொழிலாளர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

50 வயதுடைய ஒரு கொரிய நபர் மற்றும் 20 மற்றும் 30 வயதுடைய இரண்டு இலங்கை ஊழியர்கள் ஆகிய மூன்று தொழிலாளர்களும் 9 ஆம் திகதி இரவு 8:30 மணியளவில் கோசியோங் பண்ணையில் உள்ள ஒரு பெரிய நீர்த்தேக்கத்திற்குள் (4 மீட்டர் அகலம், 3 மீட்டர் நீளம் மற்றும் 2 மீட்டர் உயரம்) இறந்து கிடந்ததாக அந்நாட்டு பொலிஸார் இன்று(10) தெரிவித்துள்ளனர். 

அந்த நேரத்தில் நீர்த்தேக்கம் கிட்டத்தட்ட தண்ணீரில் நிரம்பியிருந்தது. இரவு 7:38 மணிக்கு 50 வயதுடைய நபரின் குடும்பத்தினர் தமது தந்தை அலைபேசி அழைப்பு பதிலளிக்கவில்லை என்று வழங்கிய முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த வெளிநாட்டு தொழிலாளர்களில் ஒருவர் வேலை உடைகள் போன்ற உடையை அணிந்திருந்தார், மற்ற இருவரும் சாதாரண உடையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!