முப்படையினரை தவிர நாட்டில் வேறு படைகள் இல்லை - 'சிவப்பு படை' கேள்விக்கு அமைச்சர் பதிலடி
அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (13) பிற்பகல் நடைபெற்றது.
நியூஸ்21 (கொழும்பு) - நாட்டில் இராணும், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளை தவிர, வேறு படைகள் எதுவும் இல்லை என, அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (13) பிற்பகல் நடைபெற்றது.
இதன்போது, ஊடகவியலாளர் ஒருவரால் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில் அமைச்சரவை பேச்சாளர் இதனைக் கூறினார்.
ப. பிறின்சியா டிக்சி

