பண்டிகைக் காலத்தை முன்னிட்டு QR இல்லாமல் எரிபொருள் விநியோகம்
பண்டிகைக் கால தேவைகளை கருத்தில் கொண்டு, QR குறியீட்டு முறைமை இன்றி பெட்ரோல் வாகனங்களுக்கும் எரிபொருள் வழங்கப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இந்த புதிய ஏற்பாடு இன்று (11) நள்ளிரவு முதல் வரும் 18ஆம் தேதி நள்ளிரவு வரை அமுலில் இருக்கும் என்று அந்த கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணியாளர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த காலப்பகுதியில் ஒற்றை-இரட்டை எண் அடிப்படையிலான வாகன ஒழுங்கு நடைமுறையும் தொடரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
