சொத்து விபரங்களை சமர்ப்பித்தார் மஹிந்த ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உத்தரவின்படி தனது சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான சத்தியக்கடதாசியை காலக்கெடுவிற்குள் சமர்ப்பித்தார்.
சொத்து விபரங்களை சமர்ப்பித்தார் மஹிந்த ராஜபக்ஷ
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான சத்தியக்கடதாசியை இன்று (10) இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அவரிடம் சொத்து விபரங்களை 14 நாட்களுக்குள் தாக்கல் செய்யுமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்பே அறிவித்திருந்தது. அந்த கால அவகாசம் இன்று நிறைவடைந்த நிலையில், அவர் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதுகுறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளதுடன், மஹிந்த ராஜபக்ஷ தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான விவரங்களை அதிகாரப்பூர்வமாக வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -