அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான “பஞ்சபுராணம் முற்றோதல்” போட்டி

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இரத்தினபுரி மாவட்ட அறநெறிப்பாடசாலை ஒன்றியமும் இணைந்து நடாத்தும் “பஞ்சபுராணம் முற்றோதல்” போட்டியானது இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள 15 அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு இடையில் பிரிவுகளின் அடிப்படையில் நடைபெறவுள்ளது.
அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான “பஞ்சபுராணம் முற்றோதல்” போட்டி

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இரத்தினபுரி மாவட்ட அறநெறிப்பாடசாலை ஒன்றியமும் இணைந்து நடாத்தும் “பஞ்சபுராணம் முற்றோதல்” போட்டியானது இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள 15 அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு இடையில் பிரிவுகளின் அடிப்படையில் நடைபெறவுள்ளது.

இ/எம்பி/பரியோவான் ஆரம்பப்பிரிவு பாடசாலையில் 14ஆம் திகதி (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு, பாலர்ப்பிரிவு, கீழ்ப்பிரிவு, மத்தியபிரிவு, மேல் பிரிவு என்ற அடிப்படையில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதற்கான பூரண அனுசரணையை Vijay Electrical உரிமையாளர்  அர்ஜூணன் விஜயகுமார் வழங்குகின்றார்.

ஒரு பிரிவில் இருந்து 5 மாணவர்கள் அடங்களாக 4 பிரிவுகளில் இருந்தும் ஒரு அறநெறிப்பாடசாலையில் 20 மாணவர்கள் போட்டிகளில் பங்குபெறுகின்றார்கள். மொத்தமாக 300 மாணவர்கள் இப்போட்டிகளில் பங்குபெற்ற உள்ளார்கள்.

பிரிவுகளின் அடிப்படையில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

முதல் பரிசு - 10,000 ரூபாய்.
இரண்டாம் பரிசு -  7,000 ரூபாய்.
மூன்றாம் பரிசு -  5,000 ரூபாய்.

மேலும் மாணவர்களுக்கு பதக்கங்கள் அணிவித்து சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன.

News21 இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

Add as a preferred source on Google
சமூக வலைத்தளங்களில் பின்தொடர