நாடு தழுவிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை — 500-க்கும் மேற்பட்டோர் கைது!

நேற்று (02) முன்னெடுக்கப்பட்ட நாடு தழுவிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் 29,033 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்; இதில் 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் பின்னணி உடையோர், குடிபோதையில் வாகனம் ஓட்டியோர் உட்பட பலரை பொலிஸார் கைது செய்தனர்.
நாடு தழுவிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை — 500-க்கும் மேற்பட்டோர் கைது!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நேற்று (02) ஒரே நாளில் இலங்கை பொலிஸார் நாடு தழுவிய போதை  ஒழிப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுத்தனர். இந்த நடவடிக்கையில் மொத்தம் 29,033 பேர்  சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். கடும் சோதனைகளுக்கு பிறகு 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று  அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த நடவடிக்கை நாடு முழுவதும் ஒரே நேரத்தில் ஒருங்கிணைந்த முறையில் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கைது செய்யப்பட்டவர்களில் 10 பேர் நேரடியாக குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் 222 பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களும்

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

 திறந்த பிடியாணைஉள்ள 136 பேரும் இந்த சோதனை நடவடிக்கையின்போது கைதுசெய்யப்பட்டனர். 

நீண்ட நாட்களாக பொலிஸாரிடம் இருந்து தப்பி வந்த பலர் இந்த கூட்டு நடவடிக்கையில் கைது  செய்யப்பட்ட நிலையில், போதைப்பொருள் தொடர்பான கைதுகளுடன் மட்டுமன்றி, போக்குவரத்து சட்ட மீறல்களிலும் பொலிஸார் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 115 பேரும், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்காக மேலும் 110 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் பல்வேறு போக்குவரத்து சட்ட மீறல்களுக்காக 4,498 பேர்மீது சட்டப்படியான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய கூட்டு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று மேலதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -