4 மாடி கட்டடம் இடிந்து விபத்து – 3 பேர் பலி, அதிர்ச்சியில் மக்கள்!

மத்திய பிரதேசத்தில் 4 மாடி விடுதி இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். புதிய கட்டுமானப் பணிக்காக தோண்டிய பள்ளமே விபத்துக்கு காரணம் என சந்தேகம்.
4 மாடி கட்டடம் இடிந்து விபத்து – 3 பேர் பலி, அதிர்ச்சியில் மக்கள்!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Madhya Pradesh மாநிலத்தின் அனுப்பூர் மாவட்டத்தில் உள்ள கோட்மா பகுதியில் அமைந்திருந்த 4 மாடி விடுதி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பேருந்து நிலையம் அருகே இருந்த ‘அகர்வால் லாட்ஜ்’ எனப்படும் இந்த கட்டிடம் சனிக்கிழமை மாலை சுமார் 5:30 மணியளவில் ஒருசேர சரிந்து விழுந்தது. அந்த நேரத்தில் கட்டிடத்துக்குள் இருந்தவர்களுக்கு வெளியேற நேரமின்றி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மீட்புப் படையினர் உடனடியாக விரைந்து வந்து இரவு முழுவதும் தீவிரமாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதுவரை மூன்று பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஹனுமான் தீன் யாதவ் (55) மற்றும் ராம்கிரிபால் யாதவ் (50) ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தால் தேடுதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முதற்கட்ட விசாரணையில், சுமார் 10 ஆண்டுகள் பழமையான இந்த கட்டிடத்திற்கு அருகில் புதிய கட்டுமானப் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டிருந்தது முக்கிய காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த தோண்டுதல் காரணமாக அடித்தளம் பலவீனமடைந்து, கட்டிடம் தாங்க முடியாமல் சரிந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதேவேளை, சாலையின் மறுபுறம் இருந்த ஒரு கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த விபத்து காட்சிகள் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -