அலைபேசி மற்றும் உபகரணங்களின் விலை தொடர்பில் அதிர்ச்சி தகவல்
ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் இருந்து அலைபேசி மற்றும் அலைபேசி உபகரணங்களின் விலைகள் வேகமாக அதிகரிக்கும் என அலைபேசி இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜனவரி மாதம் முதல் வற் வரி அதிகரிக்கப்படுவதால் இந்த நிலையை ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளனர்.
அலைபேசிகள் இதுவரை VAT வரிக்குள் சேர்க்கப்படவில்லை என இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வரி விதிப்பு காரணமாக அலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விலைகள் சுமார் 18 வீதத்தினால் அதிகரிக்குமென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
