தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ள கண்டி 18 வளைவு வீதி
மண்சரிவு மற்றும் கற்பாறை சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்டிருந்த கண்டி – மஹியங்கனை பிரதான வீதி தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு மற்றும் கற்பாறை சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்டிருந்த கண்டி – மஹியங்கனை பிரதான வீதி தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது.
நேற்று (19) பிற்பகல் ´18 வளைவு´ வீதியின் இரண்டாவது வளைவு பகுதியில் மண் மற்றும் கற்பாறைகள் சரிந்து வீழ்ந்ததால் வீதி தற்காலிகமாக மூடப்பட்டது.
இதனையடுத்து, வீதியில் இருந்த மண் மேடுகள் மற்றும் கற்கள் அகற்றப்பட்டு மீண்டும் அவ்வீதியில் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஹசலக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.