பெட்ரோல் மற்றும் தங்கம் விலையில் திடீரென வரலாறு காணாத மாற்றம்
வெள்ளிக்கிழமை காலை ஆசிய சந்தைகளில் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 3% உயர்ந்து $90 ஆக இருந்தது.

ஈரான் பகுதியில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவலை அடுத்து, உலக சந்தையில் எரிபொருள் மற்றும் தங்கத்தின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை ஆசிய சந்தைகளில் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 3% உயர்ந்து $90 ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் $2,400 ஆக இருந்தது.
புதிய விலையானது அண்மையில் பதிவான அதிகபட்ச விலையாக பார்க்கப்படுகிறது.
அத்துடன், ஜப்பான், ஹாங்காங், தென் கொரியா ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகளும் சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.