பரீட்சையில் சித்தியடைந்தோர் வீதம் அதிகரிப்பு... முன்னிலையில் நான்கு மாகாணங்கள்

பெறுபேறுகளை மாகாண ரீதியில் பகுப்பாய்வு செய்யும் போது 4 மாகாணங்கள் முன்னிலை பெற்றுள்ளன.
பரீட்சையில் சித்தியடைந்தோர் வீதம் அதிகரிப்பு... முன்னிலையில் நான்கு மாகாணங்கள்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

முன்னைய வருடங்களுடன் ஒப்பிடுகையில், தற்போது வெளியான சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், சித்தியடைந்து உயர்தரத்துக்கு தெரிவான மாணவர்களின் எண்ணிக்கை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதனை, இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அவர் மேலும் தெரிவிக்கையில், “428,299 பேர் இவ்வருடம் பரீட்சைக்குத் தோற்றியிருந்ததுடன், 90.54% சதவீதமான சித்தியடைந்தோர் எண்ணிக்கையானது மிகவும் சாதகமான நிலைமையாகும்.

பெறுபேறுகளை மாகாண ரீதியில் பகுப்பாய்வு செய்யும் போது 4 மாகாணங்கள் முன்னிலை பெற்றுள்ளதுடன் முதலிடத்தை தென் மாகாணம் பெற்றுள்ளது. இது 77.57% வீதமாக வீதமாக காணப்படுகிறது.

இதையும் படிங்க: சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறு: முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களின் விவரம் இதோ!

இரண்டாவது இடத்தில் 75.10% வீத சித்தி நிலையுடன் சப்ரகமுவ மாகாணமும், மூன்றாவது இடத்தினை 74.92% வீதத்துடன் மேல் மாகாணமும், நான்காவது இடத்தினை 74.50% வீதத்துடன் வடமேற்கு மாகாணமும் பெற்றுள்ளன.

உயர்தர வகுப்பில் கல்வியை தொடர் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த சதவீதம் படிப்படியாக அதிகரித்துள்ளது.

2014 இல் 69.02% ஆகவும், 2015 இல் 69.33% ஆகவும், 2016 இல் 69.4% ஆகவும், 2017 இல் 73.05% ஆகவும், 2018 இல் 75.09% ஆகவும், 2018 இல் 73.84% ஆகவும், 2018 இல் 73.84% ஆகவும், 2018 இல் 76.59% ஆகவும், 2015 இல் 76.59% ஆகவும், 74.59% ஆகவும் உள்ளது" என்றார்.

இதையும் படிங்க: அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -