‘ராஜரட்ட ரெஜினி’ ரயிலில் தீ விபத்து; வெளியான தகவல்
அநுராதபுரத்திலிருந்து பெலியத்த வரை இயக்கப்படும் ‘ராஜரட்ட ரெஜினி’ ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
தீ விபத்து ரயிலின் எஞ்சினில் ஏற்பட்டது, இருப்பினும் சம்பவத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
ரயிலை அநுராதபுர ரயில் நிலையத்திற்கு திருப்பி அனுப்பி, பயணத்தைத் தொடர மாற்று இயந்திரத்தை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதிகாலை 5.00 மணிக்கு அநுராதபுரத்திலிருந்து புறப்படவிருந்த ரயிலில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
தீ விபத்து காரணமாக, ரயில் புறப்படுவது இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாகி, காலை 7.30 மணியளவில் பெலியத்தவுக்கு மீண்டும் பயணம் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
