டொலரின் பெறுமதி மீண்டும் உயர்வு... ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
நேற்று 313.37 ரூபாயாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை இன்று 313.85 ரூபாயாக அதிகரித்துள்ளதாக மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கையில் இன்று (17)அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.
நேற்று 313.37 ரூபாயாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை இன்று 313.85 ரூபாயாக அதிகரித்துள்ளதாக மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.
அத்துடன், 328.78 ரூபாயாக இருந்த அமெரிக்க டொலரின் விற்பனை விலை 329.29 ரூபாயாக அதிகரித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை இன்று 311.74 ரூபாயாகவும் விற்பனை விலை 326 ரூபாயாகவும் உள்ளது.
மேலும் சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 315 ரூபாயாகவும், விற்பனை விலை 327 ரூபாயாக காணப்படுகின்றது.