குடும்பத் தகராறு: மனைவியை தீ வைத்து கொன்ற கணவன் – மெதகம பகுதியில் அதிர்ச்சி சம்பவம்

குடும்பத் தகராறு தீவிரமடைந்த நிலையில், கணவன் தனது மனைவியை தீ வைத்து கொன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பெப்ரவரி 14, 2026 - 07:42
குடும்பத் தகராறு: மனைவியை தீ வைத்து கொன்ற கணவன் – மெதகம பகுதியில் அதிர்ச்சி சம்பவம்

குடும்பத் தகராறு தீவிரமடைந்த நிலையில், கணவன் தனது மனைவியை தீ வைத்து கொன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த துயரமான சம்பவம் மெதகம பிரதேசத்திலுள்ள பரசன்கஸ்வெவ பகுதியில் நேற்று (13) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் பரசன்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய பெண் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்ப விசாரணைகளின் படி, நீண்டநாள் குடும்பப் பிரச்சினை காரணமாகவே இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய கணவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பரசன்கஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவத்தின் பின்னணியை முழுமையாக அறிய தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!