ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வீட்டிலிருந்த அவரை அழைத்து, துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர். 
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மித்தெனிய, உல்ஹிட்டியாவ பகுதியில் ழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்தனர். 

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வீட்டிலிருந்த அவரை அழைத்து, துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர். 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், நேற்று புதன்கிழமை (12) மாலை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான CCtv காட்சி வெளியாகியுள்ளது. 

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 

கேஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவினர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், “பெக்கோ சமன்” என்ற நெதுன்கொட நிர்மல பிரசன்ன என்பவரும் அக்குழுவில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர