ரசாயனப் பொருளை சுவாசித்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
மொரட்டுவை பகுதியில் உள்ள பாடசாலையை சேர்ந்த மாணவர்கள் சிலர் குறிப்பிட்ட ரசாயனப் பொருளை சுவாசித்ததால் பாணந்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 13 மாணவர்கள், ஆய்வக பரிசோதனையில் ஈடுபட்டடிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் நிலை மோசமாக இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
