குருவிட்ட சிறைச்சாலையில் அமைதியின்மை; சிறை வைத்தியசாலைக்கும் சேதம் ஏற்படுத்திய கைதிகள்
குருவிட்ட சிறைச்சாலையில் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. கைதிகளின் அமைதியின்மையின்போது சிறை வைத்தியசாலைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலையில் இன்று (07) மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்த தகவலின்படி, நேற்று (06) இரவு சிறை வளாகத்தில் முதன்முதலாக அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
எனினும், இன்று காலை மீண்டும் கைதிகளுக்கிடையில் பதற்ற நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, சில கைதிகள் சிறைச்சாலை வளாகத்தில் உள்ள வைத்தியசாலைப் பகுதிக்கும் சேதம் ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சிறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர