மத்திய கிழக்கு மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்ய இலங்கை அரசு ரஷ்யாவுடன் அவசர பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ரஷ்ய எண்ணெய் கொள்வனவுக்கான தடைகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை திணைக்களம் அறிவித்துள்ளது. சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கு மேல் மழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நடக்கும் போரின் நிலை நாட்டின் எதிர்காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஹர்ஷன சூரியப்பெருமவின் ராஜினாமா ஜூன் 20, 2025 முதல் அமலுக்கு வரும் என்றும் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இலங்கை வரலாற்றில் 2024 ஆம் ஆண்டிலேயே அதிக வரிவருமானம் பெறப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நிலவும் கடும் மழை காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்துள்ளனர்.
குருநாகல் - கல்கமுவ, வேவரனவெடிய பகுதியில் காட்டு யானை அதன் குட்டியுடன் குழிக்குள் வீழ்ந்து கிடந்துள்ளது.
லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள ஆற்றில் நேற்று (11) பிற்பகல் நீராடச் சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
முதல் தடவையாக நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகின்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபானங்களின் தரங்களை சோதனை செய்ய கலால் வரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இலங்கை தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் (ICTA) தலைவர் பதவியிலிருந்து ஓஷத சேனாநாயக்க இராஜினாமா செய்துள்ளார்.