அரையிறுதியில் நுழைந்தது ஆப்கானிஸ்தான்; உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது ஆஸி!

இதனிடையே மழை குறிக்கிட்டதால், டிஎல்எஸ் விதிப்படி 19 ஓவர்களில் 114 ரன்கள் பங்களாதேஷ் அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அரையிறுதியில் நுழைந்தது ஆப்கானிஸ்தான்; உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது ஆஸி!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டிக்கு ஆப்கானிஸ்தான் அணி தகுதி பெற்று சாதித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சூப்பர் 8 போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதனிடையே மழை குறிக்கிட்டதால், டிஎல்எஸ் விதிப்படி 19 ஓவர்களில் 114 ரன்கள் பங்களாதேஷ் அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால், 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே பங்களாதேஷ் அணி பெற்று தோல்வியை சந்தித்தது.

8 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

சூப்பர் 8 சுற்றில் குரூப் 2-ல் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளும் குரூப் 1-ல் இந்தியாவும் ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டd.

குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலியா விளையாடிய 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. ஆப்கானிஸ்தான் அணி இன்று இரண்டாவது வெற்றியை பதிவு செய்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

வருகின்ற வியாழக்கிழமை நடைபெறும் முதல் அரையிறுதியில் காலை 6 மணிக்கு தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும், இரண்டாவது அரையிறுதியில் இரவு 8 மணிக்கு இந்தியா, இங்கிலாந்தும் மோதுகின்றன.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -