மருதானையில் தடம் புரண்ட ரயில்; நடைமேடையும் பலத்த சேதம்
மருதானை ரயில் நிலையத்தில் இன்று (25) காலை ரயில் தடம் புரண்டது.
எரிபொருள் ரயிலொன்று தடம் புரண்டுள்ளதுடன், ரயில் நடைமேடையும் பலத்த சேதமடைந்துள்ளது.
இதன்காரணமாக மருதானை ரயில் நிலையத்தின் 1, 2 மற்றும் 3 ஆகிய ரயில் மேடைகள் தடைப்பட்டுள்ளன.
இதன் காரணமாக மருதானை ரயில் நிலையம் மற்றும் கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் அனைத்து ரயில்களும் தாமதத்துடன் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
