வேன் கவிழ்ந்ததில் 7 ஆயிரம் முட்டைகள் உடைந்து ஆறாக ஓடியது

இவர் சரக்கு வேனில் 10 ஆயிரம் முட்டைகளை ஏற்றிக்கொண்டு அதே பகுதி, அம்பேத்கர் நகரில் உள்ள கடைக்கு முட்டை சப்ளை செய்வதற்காக சென்றார்.
வேன் கவிழ்ந்ததில் 7 ஆயிரம் முட்டைகள் உடைந்து ஆறாக ஓடியது
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம். மொத்த முட்டை வியாபாரி. இவர் கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை போன்ற பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சில்லரையாகவும் மொத்தமாகவும் முட்டை சப்ளை செய்து வருகிறார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இவர் சரக்கு வேனில் 10 ஆயிரம் முட்டைகளை ஏற்றிக்கொண்டு அதே பகுதி, அம்பேத்கர் நகரில் உள்ள கடைக்கு முட்டை சப்ளை செய்வதற்காக சென்றார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அப்போது அங்கிருந்த மழைநீர் வடிகால்வாய் மீது மினி வேன் ஏறி இறங்கியபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்தது.

இதில் சரக்கு வேனில் இருந்த முட்டைகள் நொறுங்கி ஆறாக ஓடியது. மொத்தம் 7 ஆயிரம் முட்டைகள் முழுவதும் நொறுங்கியது. 3 ஆயிரம் முட்டைகள் சேதம் அடையவில்லை. அதனை அப்பகுதி மக்கள் சேகரித்து கொடுத்து உதவி செய்தனர்.

உடைந்த முட்டைகளால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியது. அதில் மண்ணை கொட்டி துப்புரவு தொழிலாளர்கள் சுத்தம் செய்தனர். வேன் விபத்தில் 7 ஆயிரம் முட்டைகள் நொறுங்கியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -