இலங்கையில் இந்த வருடத்தில் துப்பாக்கிச்சூட்டில் 44 பேர் பலி
இந்த வருடத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 44 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ கூறியுள்ளார்.
அவற்றில் பெரும்பாலானவை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கும் படுகொலைகள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.