இலங்கை மத்திய வங்கி வளாகத்தில் 09 பேர் கைது 

இலங்கை மத்திய வங்கி வளாகத்துக்குள் அனுமதியின்றி நுழைந்த 09 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 8, 2023 - 15:14
இலங்கை மத்திய வங்கி வளாகத்தில் 09 பேர் கைது 

இலங்கை மத்திய வங்கி வளாகத்துக்குள் அனுமதியின்றி நுழைந்த 09 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குத்தகை மற்றும் கடன் செலுத்துவோர் சங்கத்தின் உறுப்பினர்கள் குழுவொன்று இன்று (08) காலை இலங்கை மத்திய வங்கியின் வளாகத்துக்குள் பலவந்தமாக நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக அந்த இடத்தில் பதற்றமான நிலையொன்று ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து,  பெண் ஒருவரும் 08 ஆண்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!