சாதாரணத் தர பரீட்சை தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பு

மார்ச் 11 ஆம் திகதிக்குப் பிறகு நடத்தப்படும் கல்வி வகுப்புகள் குறித்து தமக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சாதாரணத் தர பரீட்சை தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

2024 ஆண்டு ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரணத் தர பரீட்சைக்காக மார்ச் 11 ஆம் திகதிக்குப் பிறகு நடத்தப்படும் கல்வி வகுப்புகள் குறித்து தமக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்தத் திகதிக்கு அப்பால் நடத்தப்படும் ஏதேனும் கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள், பட்டறைகள் அல்லது இணைய அமர்வுகள் குறித்து பின்வரும் தொடர்பு எண்கள் மூலம் முறைப்பாடு செய்ய முடியும்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பொலிஸ் தலைமையகம் – 0112421111

பொலிஸ் அவசர உதவி எண் – 119

பரீட்சைகள் திணைக்களம்  – 1911

பாடசாலை பரீட்சைகள் மற்றும் பெறுபேறுகள் கிளை  – 011 278 4208 / 011 278 4537

2024 ஆண்டு ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரணத் தர பரீட்சைக்கான அனைத்து வகையான கல்வி வகுப்புகள் மார்ச் 11 நள்ளிரவு முதல் தடை செய்யப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் மார்ச் 7 ஆம் திகதி அறிவித்தது.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரணத் தர பரீட்சை மார்ச் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -