தடம் புரண்டது பொடி மெனிகே
பொடி மெனிகே ரயில், பதுளை ரயில் நிலையத்துக்கு அருகில் சுமார் 8.40 மணியளவில் தடம் புரண்டது.
இன்று காலை 8.30 மணியளவில் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணத்தை ஆரம்பித்த நிலையில் ரயில் நிலையத்தில் இருந்து ஒன்றரை கிலோமீற்றர் தூரத்தில் தடம்பு ரண்டுள்ளது.
குறித்த ரயிலில் அதிகளவான பயணிகள் பயணித்துள்ளதாகவும், அவர்களை பதுளை ரயில் நிலையத்துக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ரயில் நிலைய பேச்சாளர் தெரிவித்தார்.
