கொழும்பில் துப்பாக்கிச்சூடு: பொலிஸார் வெளியிட்ட தகவல்!

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

ஜனவரி 25, 2024 - 12:12
கொழும்பில் துப்பாக்கிச்சூடு: பொலிஸார் வெளியிட்ட தகவல்!

கொழும்பு, ஜிந்துபிட்டி, ஆட்டுப்பட்டி தெருவில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!